காலை எழுந்ததும் காப்பி குடித்ததும்
கால்கள் உன்னை நாடிடுதே
வகுப்பறைப் பாடம் சலித்திடும் போது
மனமும் உன்னைத் தேடிடுதே
அமைதியும் தனிமையும் தேவைப்படும் போது
சிந்தை உன்னை நாடிடுதே
பாடல்கள் பாடி பாரத்தைக் குறைக்க
மனமும் உன்னைத் தேடிடுதே
காதல் கடிதம் பிரித்து படித்திட
இதயம் உன்னை நாடிடுதே
கவிதைகள் பாடும் பயிற்சிகள் செய்ய
மனமும் உன்னைத் தேடிடுதே
உன்னை நான் நன்கு அறிவேன்
உனக்குள் நான் வந்து விட்டால் - வேறு
யாருக்கும் உன்னுள் இடமில்லை
எப்போதும் உன்னுள்ளே
ஒருவருக்கே இடமுண்டு
எல்லாரும் உன்னை
வெறுப்பது வழமை
எல்லாரையும் உன்னுள்
கொணர்வதே உன் வல்லமை.
தினந்தோறும் உனக்குள்ளே
எனக்கு ஓர் இடம் வேண்டும்
தினமொரு முறையேனும் - உன்
தரிசனம் நான் பெற வேணும்
தினந்தோறும் நான் தேடும்
மல சல கூடமே
காலை தோறும் உனைத் தேடும்
கடனாளிகளில்
நானும் ஒருவன்.
wrote-09/06/2008, type-14/12/2012 - By Robert Dinesh
